2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

by Editor / 24-08-2021 04:18:14pm
2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு


 

தமிழகத்தில் மேலும் 2 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த மே மாதம் 7ம் தேதி ஆட்சி அமைத்தது. அன்று முதல் தமிழகத்தில் நூற்றுக் கணக்கான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். தலைமை செயலாளர் முதல் மாவட்ட ஆட்சியர்கள் வரை அனைவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் கூட 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டார்.


இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் 2 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குனராக பதவி வகித்து வந்த டிஜிபி பிரதீப் பிலிப் காவலர் பயிற்சிப் பள்ளியின் டிஜிபியாக நியமிக்கப் படுவதாகவும் ஆப்பரேஷன்ஸ் பிரிவின் ஏடிஜிபியாக இருந்த அமல் ராஜ் தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குனராக நியமிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via