கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் புதிய வீடுகள்

by Editor / 02-09-2021 08:37:48pm
கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் புதிய வீடுகள்

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் வாழும் குடும்பங்கள் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆயிரத்து 410 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் 12,752 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 9,048 தனி வீடுகள் கட்ட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 5,396 அடுக்குமாடிக் குடியிருப்புகள் 562 கோடி ரூபாய் மதிப்பில் கட்ட மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அவற்றுள் 2,876 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும் 1,692 தனி வீடுகளுக்கான பணிகள் தொடங்கி அவற்றுள் 569 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் , மீதமுள்ள 1,123 வீடுகளுக்கான பணிகள் பல்வேறு நிலைகளில் இருப்பதாகவும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

 

Tags :

Share via