தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

by Editor / 06-09-2021 09:42:36am
தமிழகத்தில்  5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில்அடுத்தஐந்துநாட்களுக்குமிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நீலகிரி , கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

வடக்கு மற்றும் அதனையொட்டிய வங்கக் கடல் பகுதியில் , 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாகவும் , இதனால் , மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது . செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழையால் பல நீர்நிலைகள் நிறைந்தன . கடலூர் மாவட்டம் முழுக்க பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் .

 

Tags :

Share via