பள்ளி விடுதியில் மாணவி  தூக்கிட்டு தற்கொலை 7 பேரிடம்  சிபிசிஐடி போலீசார் விசாரணை

by Editor / 27-07-2022 09:54:57am
பள்ளி விடுதியில் மாணவி  தூக்கிட்டு தற்கொலை 7 பேரிடம்  சிபிசிஐடி போலீசார் விசாரணை


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தெக்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசானம். கூலித் தொழிலா. இவரது மனைவி முருகம்மாள். இவர்களது ஒரே மகள் சரளா (17), திருவள்ளூர்  மாவட்டம் மப்பேடு அடுத்த கீழச்சேரி அரசு நிதி உதவி பெறும் பள்ளி விடுதியில் நேற்று முன்தினம் பனிரெண்டாம் வகுப்பு மாணவியான இவர்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தொடர்ந்து இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் பள்ளி நிர்வாகி, தலைமையாசிரியர்,பள்ளி ஆசிரியர் 5 பேர், என 7 பேரிடம்  சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்ய உள்ளனர்.

 

Tags : The CBCID police investigated the 7 people who committed suicide by hanging a student in the school hostel

Share via