நாடு தழுவிய ஊரடங்கு திட்டம் இல்லை : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
இது குறித்து அவர் கூறியதாவது
நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 4ந் தேதி முதல் முதல் 17ந் தேதி வரையிலான நாட்களில் சுமார் 23,02,494 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்கவும், அனைத்து மாநிலங்களுக்கும் தேவைப்படும் உதவிகளை செய்ய உத்தரவிடபட்டுள்ளது.என்று கூறி உள்ளார்.
.
Tags :