பா.ஜ., அலுவலகத்தில் தடையை மீறி 6 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை

by Editor / 11-09-2021 02:49:08pm
பா.ஜ., அலுவலகத்தில் தடையை மீறி 6 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை

விழுப்புரம் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில், அரசின் தடையை மீறி 6 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.நிகழ்ச்சிக்கு, பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுகுமார், ஊடகப் பிரிவு தலைவர் தாசசத்யன், நிர்வாகிகள் துரை சக்திவேல், பழனி, ராஜூலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.அரசின் தடை உத்தரவை மீறி 6 அடி உயர விநாயகர் சிலையை அலுவலக நுழைவு வாயிலில் நேற்று மாலை 5:00 மணிக்கு பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர்.ஆர்.டி.ஓ., அரிதாஸ், தாசில்தார் வெங்கடசுப்ரமணியன், டி.எஸ்.பி., பழனிச்சாமி தலைமையிலான போலீசார் சிலையை அகற்றுமாறு அறிவுறுத்தினர். ஆனால், பா.ஜ.,வினர் சிலையை மாலை 6:00 மணி வரை வைத்திருப்பதாக கூறினர்.அதன் பின், மாலை 6:00 மணிக்கு நுழைவு வாயிலில் இருந்து விநாயகர் சிலையை அலுவலகத்திற்குள் எடுத்துச்சென்றனர்.இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

 

Tags :

Share via