மர்மமாக இறந்துகிடந்த நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள். இவர் நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் வழக்கறிஞராகவும் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்துகொண்டே விவசாயம் மற்றும் ஜல்லிக்கட்டு, உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்னெடுத்து போராட்டம் நடத்தி வந்தார். மேலும் பல நலத்திட்ட உதவிகளையும் செய்துவந்தார். இரண்டு முறை குன்னம் தொகுதியில் வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் மூலமாகக் களம் கண்டு தோல்வியுற்றார். மேலும், இவரின் மனைவி தமிழரசி ஓலைப்பாடி ஒன்றிய கவுன்சிலராக இருந்து வருகிறார்இந்நிலையில், இன்று காலை வெகு நேரமாகியும் வீட்டின் கதவுகள் பூட்டியே இருந்திருக்கிறது. எப்போது காலையில் நடைப் பயிற்சிக்காகவும் செய்தித்தாள்கள் வாங்குவதற்காக வெளியே வருவார் அருள். ஆனால் வெகு நேரமாகியும் அவரின் வீட்டின் கதவு திறக்காததால், அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் கதவை உடைத்துப் பார்த்தபோது துண்டுடன் இறந்த நிலையில் சுவரில் சாய்ந்து கிடந்தார்.இவர் மாரடைப்பால் உயிரிழந்தாரா? அல்லது தற்கொலையா? யாராவது முன்விரோதத்தில் கொலை செய்துவிட்டார்களா? என்கிற பல கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரின் உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இல்லாதப்பட்டவர்களுக்கும் சட்டம் மூலமாகப் பல உதவிகளைச் செய்தவர். திமுக, அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடு மற்றும் முக்கிய நிர்வாகிகள் செய்யும் தவறுகளைத் தட்டிக்கேட்டுப் பல போராட்டங்களை நடத்தினார்.
Tags :