புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்
மத்திய தேர்தல் ஆணையத்தில் இரண்டு காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான குழு, ஐஏஎஸ் அதிகாரிகளான ஞானேஷ்குமார் மற்றும் எஸ்.எஸ்.சாந்து ஆகியோரை புதிய தேர்தல் ஆணையர்களாக நியமனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆணையர்கள் தேர்வு கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தகவல் தெரிவித்துள்ளார்.தேர்தல் ஆணையர்கள் தேர்வு முறை ஒருதலைபட்சமாக நடந்ததாக எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
Tags :