தென்காசி பத்திரப்பதிவு துறையில் தொடரும் சஸ்பெண்ட் நடவடிக்கைகள்
தென்காசி மாவட்டத்தில் கடந்த சிலமாதங்களாகவே சார்பதிவாளர் மீது பணிநீக்கம் நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டுஇருக்கின்றன.போலிபத்திரம் பதிவு செய்த சார்பதிவாளர் முதல் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை பத்திர பதிவு செய்தது வரை ஏராளமான சார்பதிவாளர்கள் விசாரணை வளையத்திற்குள் வந்தவண்ணம் உள்ளனர்.கடந்த செப்டம்பர் மாதம் தென்காசி சார் பதிவாளர் மணி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.கடந்த 15ஆம் தேதி தென்காசி மாவட்ட சார்பதிவாளர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டுவரும் சார்பதிவாளர் அலுவலக சார்பதிவாளர் மணிகண்டன் என்பவரும்,சுரண்டை சார் பதிவாளர் உமா சங்கர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.போலி ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு செய்வது, அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை பத்திர பதிவு செய்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் இன்று பாவூர்சத்திரம் சார்பதிவாளர் வசந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.தென்காசி மாவட்டத்தில் முறைகேடாக பதிவு செய்துவரும் சார்பதிவாளர்கள் மீது நடவடிக்கைகள் பாய்ந்துவருவதால் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
Tags :