மியான்மாரில் பேருந்து நிறுத்தம் அருகே வெடிகுண்டு தாக்குதல்

by Staff / 01-06-2022 01:39:44pm
மியான்மாரில் பேருந்து நிறுத்தம் அருகே வெடிகுண்டு தாக்குதல்

மியான்மாரின் நகரில் பேருந்து நிறுத்தம் அருகே நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ராணுவ ஆட்சிக்கு எதிரான அமைப்பு தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்புத்துறை குற்றம்சாட்டிய நிலையில் எந்த அமைப்பும் இதுவரை தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. பேருந்துக்காக காத்திருந்தவர்கள் என பலர் தாக்குதலில் படுகாயம் அடைந்தனர் சம்பவ இடத்திலிருந்து வெடிக்காத குண்டு ஒன்றை பாதுகாப்பு வீரர்கள் பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via