தி.மு.க. பிரமுகர் சரமாரியாக வெட்டி படுகொலை

by Admin / 25-02-2022 12:39:15pm
தி.மு.க. பிரமுகர் சரமாரியாக வெட்டி படுகொலை

தூத்துக்குடி பால தண்டாயுத நகர் பகுதி தி.மு.க செயலாளராக பணியாற்றி வந்தவர் கண்ணன்(48). டெய்லர் தொழில் செய்யும் இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவியும் மகாலட்சுமி என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளது.

இன்று இரவு தாளமுத்து நகரில் உள்ள தனது டெய்லர் கடையை பூட்டி விட்டு வெளியே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம ஆசாமிகள் 3 பேர் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கண்ணனை சரமாரியாக  வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த கண்ணன் அந்தப் பகுதியில் சில பெண்களை கேலி செய்ததாக போலீசில் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த ஆத்திரத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக தாளமுத்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன மேலும் கொலையாளிகளை தேடி வருகின்றன 
 

 

Tags :

Share via