மதிப்பெண் சான்றிதழ் எப்போது? தேர்வு துறை அறிவிப்பு

by Editor / 28-09-2021 05:35:33pm
மதிப்பெண் சான்றிதழ் எப்போது? தேர்வு துறை அறிவிப்பு

 

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 30ஆம் தேதி பள்ளிகளில் வழங்கப்படுமென அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.


சென்னை: இதுகுறித்து அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
”11ஆம் வகுப்பு மார்ச் 2021 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசியர் மூலம் வரும் 30-ஆம் தேதி மதியம் 1 மணி முதல் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட, தங்களது மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.


இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர் சான்றொப்பமிட்டு இருந்தால் மட்டுமே மதிப்பெண் பட்டியல் செல்லும்” என குறிப்பிட்டுள்ளார். 

 

Tags :

Share via