கொரோனா தற்காப்பு பொருட்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்!

by Editor / 23-04-2021 01:53:11pm
கொரோனா தற்காப்பு பொருட்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்!

சென்னையின் பல்வேறு இடங்களில் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளத் தேவையான பொருட்களை பொதுமக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கினார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க திமுக சார்பில் தற்காப்பு பொருட்களை வழங்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டது. தேர்தல் ஆணையம் அனுமதி அளித்ததை அடுத்து மக்களுக்கு கொரோனா தற்காப்பு பொருட்களை வழங்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். சென்னையில் இன்று சூளை, திருவிக நகர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டாலின் கொரோனா தற்காப்பு பொருட்களை வழங்கினார். கபசுர குடிநீர், முகக்கவசம், கிருமிநாசினி, முட்டை உள்ளிட்ட பொருட்களையும் அவர் வழங்கினார். திமுக முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கொரோனா தற்காப்பு பொருட்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்!

சென்னையின் பல்வேறு இடங்களில் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளத் தேவையான பொருட்களை பொதுமக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கினார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க திமுக சார்பில் தற்காப்பு பொருட்களை வழங்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டது. தேர்தல் ஆணையம் அனுமதி அளித்ததை அடுத்து மக்களுக்கு கொரோனா தற்காப்பு பொருட்களை வழங்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். சென்னையில் இன்று சூளை, திருவிக நகர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டாலின் கொரோனா தற்காப்பு பொருட்களை வழங்கினார். கபசுர குடிநீர், முகக்கவசம், கிருமிநாசினி, முட்டை உள்ளிட்ட பொருட்களையும் அவர் வழங்கினார். திமுக முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Tags :

Share via