பிச்சாவரம் படகு குழாம் பகுதியில் சுற்றுலா துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆய்வு

by Editor / 30-09-2021 03:51:54pm
  பிச்சாவரம் படகு குழாம் பகுதியில்   சுற்றுலா துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆய்வு

பிச்சாவரம் படகு குழாம் பகுதியை மேம்படுத்துவது தொடர்பாக சுற்றுலா துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆய்வு செய்தார்.கடலூர் மாவட்டம், சிதம்பரம் பிச்சாவரம் சுற்றுலா மையத்தினை சுற்றுலா துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன், சுற்றுலா துறை இயக்குநர் சந்தீப்நந்தூரி முன்னிலையில் மாவட்ட கலெக்டர் கி.பாலசுப்ரமணியம், தலைமையில் கூடுதல் கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்துவது குறித்து களஆய்வு செய்தார்.அப்போது அமைச்சர் கூறியதாவது

சிதம்பரத்தில் அமைந்துள்ள பிச்சாவரத்தில் சதுப்பு நில காடுகள் சுமார் 1,100 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநில காடுகள் ஆகும், இங்குள்ள வெள்ளாறு மற்றும் கேலரூன் நதி அமைப்புகளால் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கும் நீர்நிலைகள் படகு சவாரிக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.

பிச்சாவரம் படகு குழாம் 1984-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் செயல்பட்டு வருகிறது. இங்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் 5 மோட்டார் படகுகள் மற்றும் 35 துடுப்பு படகுகள் மூலம் படகு சவாரி நடைபெற்று வருகிறது. இங்கு ஆண்டுதோறும் சராசரியாக 3 முதல் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மற்றும் கூடுதல் வசதிகள் செய்து தரும் வகையில் படகு குழாம், புங்கா, திறந்தவௌி முகாம், காட்சி கோபுரம், உணவகம் மற்றும் தங்கும் விடுதி ஆகியவற்றின் அடிப்படை கூட்டமைப்பு வசதிகளை உலகத்தரத்தில் மேம்படுத்த அறிவிப்புகள் சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டு அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பிச்சாவரம் படகு குழாம் அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படும், சிதம்பரத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தங்கும் விடுதிகள் உடனடியாக பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்கப்படும், சுற்றுலா பயனிகளுக்கு தரமான உணவு அளிக்க உணவகங்கள் மற்றும் சுற்றுலா அலுவலருக்கு அலுவலகம் அமைக்கப்படும்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் கடல் உணவு திருவிழாவாக கடற்கரை பகுதியில் சுற்றுலா பயனிகளை ஊக்குவிக்க பல்வேறு விழாக்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வனத்துறையை சார்ந்த சின்னத்தீவினை ஆய்வு செய்தோம், அங்குள்ள கட்டிடம் விரைவில் சீரமைத்து பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via