ஈரோடு அருகே தீ விபத்து; பல கோடி ரூபாய் மஞ்சள் எரிந்து நாசம்

by Editor / 03-10-2021 04:32:40pm
ஈரோடு அருகே தீ விபத்து; பல கோடி ரூபாய் மஞ்சள் எரிந்து நாசம்

ஈரோடு மாவட்டம் பெரிய புலியூர் அருகே அங்கித் அகர்வால் என்பவர் விவசாயிகளிடம் இருந்து மஞ்சள் விலைக்குப் பெற்று அதனை மஞ்சள் தூள் ஆக்கி குடோனில் இருப்பு வைத்து வட மாநிலங்களில் உள்ள பல்வேறு விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வியாபாரம் செய்து வருகிறார்.இந்நிலையில் இன்று அதிகாலை பெரிய புலியூர் பகுதிகளில் மழை பெய்தபோது குடோனில் இடி இறங்கி உள்ளது. இதனால் அங்கிருந்த மஞ்சள் மூட்டைகள் தீப்பிடித்து எரியத் துவங்கியது.இதனைக் கண்ட அப்பகுதியினர் பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீ கட்டுப்படுத்த முடியாமல் கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் ஈரோடு, பெருந்துறை, கோபி பகுதியில் இருந்து மேலும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் 50 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த தீ விபத்தில் உயிர் சேதம் இல்லாத போதும் பல கோடி ரூபாய் மதிப்பிலான மஞ்சள் எரிந்து சேதம் ஆனது.

 

Tags :

Share via