ரூ.98 கோடி மதிப்பிலான பீர் பாட்டில்கள் பறிமுதல்

by Staff / 05-04-2024 01:42:10pm
ரூ.98 கோடி மதிப்பிலான பீர் பாட்டில்கள் பறிமுதல்

கர்நாடக மாநிலத்தில் வருகிற 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளன. இதனால் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மக்களுக்கு பணம், மது பானங்கள் கொடுப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மைசூரு பகுதிகளில் நேற்று (ஏப்ரல் 4) நடத்தப்பட்ட சோதனையில் ரூ.98.52 கோடி மதிப்பிலான 1.22 கோடி லிட்டர் பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாநிலம் முழுவதும் நேற்று ரூ.6.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via