அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.6 லட்சம் மோசடி

by Admin / 11-03-2022 05:07:53pm
அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.6 லட்சம் மோசடி

மதுரை தல்லாகுளம் அப்துல் ரகுமான் தெருவை சேர்ந்த கணேசன் மனைவி மகாலட்சுமி (வயது 64). இவர் தல்லாகுளம் போலீசில் புகார்மனு ஒன்றை கொடுத்துள்ளார். 

என் மகள் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.  அப்போது வளர்நகர் அய்யனார் தெருவை சேர்ந்த முகமது இக்பால் மனைவி வகிதா பவுசியா என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் என்னிடம், எனக்கு தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் பலரை தெரியும். நீங்கள் பணம் கொடுத்தால் சுலபமாக அரசு வேலை வாங்கிவிடலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறினார். 
 
இதனை நம்பிய நான் வகிதாபவுசியாவிடம் வங்கி கணக்கு மூலம் ரூ.6 லட்சம் பணம் கொடுத்தேன். இதனை பெற்றுக் கொண்ட அவர் வேலை வாங்கித்தரவில்லை. 

இதனால்  அவரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். அதற்கு அவர் தர மறுத்துவிட்டார். எனவே போலீசார் இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக, வகிதாபவுசியாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via