மனைவி பேசாததால் மனம் உடைந்து கணவன் தற்கொலை

by Staff / 17-03-2023 04:35:45pm
மனைவி பேசாததால் மனம் உடைந்து கணவன் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலஈரால் வடக்கு தெருவை சேர்ந்த பால்ராஜ் மகன் கண்ணன்(வயது 34). லாரி டிரைவர். இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த இவரது மனைவி கனகவல்லி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இவருடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லாரியில் இருந்து இறங்கி வந்த கண்ணன், அதேஊரிலுள்ள தந்தை பால்ராஜ் வீட்டில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் கீழஈரால் அருகிலுள்ள வேலுச்சாமி என்பவரது தோட்டத்தில் குளிர்பானத்தில் பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via