பஸ் ஓட்டுனர், நடத்துனர்கள் ஜூலையில் 1,000 பேர் ஓய்வு..?
தமிழகத்திலுள்ள அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றும் அரசு பஸ் ஓட்டுனர், நடத்துனர் உள்ளிட்ட, 1,200 பேர், அடுத்த மாதம் இறுதிக்குள் ஓய்வு பெற உள்ளனர். தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில், ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்கள் என, 1.21 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், ஓட்டுனர், நடத்துனர் பிரிவில் மட்டும், 30 சதவீதம் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, வரும் ஜூலை மாதத்திற்குள் மேலும், 1,200 பணியாளர்கள் ஓய்வுபெற உள்ளனர்என தகவல்கள் வெளியாகியுள்ளது. Tags :