தள்ளாடிவந்த கணவனுக்காக போலீசாரிடம் மல்லுக்கட்டிய பெண் உள்ளிட்ட 3 பேர் கைது.

by Editor / 18-04-2023 11:57:25pm
தள்ளாடிவந்த  கணவனுக்காக போலீசாரிடம் மல்லுக்கட்டிய பெண் உள்ளிட்ட 3 பேர் கைது.

சென்னையில் வாகன சோதனையின் போது மதுபோதையில் பிடிபட்ட நபரை விடுவிக்குமாறு கூறி பெண் ஒருவர் உதவி ஆய்வாளரிடமும்,காவலரிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேடு நெடுஞ்சாலையில் உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அந்தவழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்களை பிடித்து சோதனை நடத்தியதில் அவர்கள் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, காவலர்கள் அவர்கள்  மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அங்கு வந்த பெண் ஒருவர் பிடிபட்ட நபர்களை விடுவிக்குமாறு கூறி உதவி ஆய்வாளரிடமும்,காவலர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.உதவி ஆய்வாளர் கொடுத்த புகாரைத்தொடர்ந்து அந்தபெண்,மற்றும் இரண்டு ஆண்கள் மீது பல்வேறு பிரிவின்கீழ் வழக்கு பதிவுசெய்து  அவர்கள் 3 பேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via