பிரியங்காபோலீசாருடன் கடும் வாக்குவாதம்

by Editor / 04-10-2021 09:40:32am
பிரியங்காபோலீசாருடன் கடும் வாக்குவாதம்

உ.பி.,யில் நடந்த வன்முறையில் பலியான விவசாயிகள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச்சென்ற காங்., தலைவர் சோனியாவின் மகளும், காங்., பொதுசெயலருமான பிரியங்கா போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்நேரத்தில் பிரியங்கா போலீசாருடன் கடும் வாக்குவாத்ததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.உ .பி., மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் துணை முதல்வருக்கு, வேளாண் சட்டங்கள் தொடர்பாக கருப்பு கொடி காட்ட விவசாயிகள் திரண்டிருந்தனர். அந்நேரத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியாயினர்.அதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 8 விவசாயிகள் பலியாகினர்.இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர்.

இப்பகுதி நோக்கி அரசியல் தலைவர்கள் படையெடுத்து வந்தால் மேலும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் பிரியங்கா தனது ஆதரவாளர்களுடன் லக்கிம்பூர் நோக்கி வந்தார். ஆனால் போலீசார் அவரை மாவட்டத்திற்குள் அனுமதிக்கவில்லை. பெண் போலீசார் சுற்றி வளைத்தனர். இந்நேரத்தில் போலீசாருடன் பிரியங்கா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

Tags :

Share via