காதல் மனைவியை காரில் கடத்திய பெற்றோர்-  கணவர் புகார்.

by Admin / 14-11-2021 09:37:14pm
 காதல் மனைவியை காரில் கடத்திய பெற்றோர்-  கணவர் புகார்.

 காதல் மனைவியை காரில் கடத்திய பெற்றோர் - கணவர் புகார்...

காரில் கடத்திச் செல்லப்பட்ட காதல் மனைவியை மீட்டுத்தரக்கோரி  மகளிர் காவல் நிலையத்தில் புகார்.
 
கோவை மாவட்டம், வழுக்கு பாறை யைச் சேர்ந்தவர் அரவிந்தராஜ் (21) இவருக்கும் கேரளா மாநிலம் கொளுஞ்சாம் பாறை யைச் சேர்ந்த கணேஷ் - கலைவாணி  மகளான காவ்யா 20 என்பவருக்கு கல்லூரி நண்பர்கள் மூலமாகபழக்கம் ஏற்பட்டு  கடந்த 4 ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர்..

 அவர்கள் இருவரும் 4 மாதங்களுக்கு திருப்பூர் அனைப்பாளையத்தில்  ஒரு கோவில் வைத்து நண்பர்கள் உதவியுடன் மாலை மாற்றியும், தாலி கட்டியும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பின்னர் வழக்கறிஞர் மூலம் காதல் திருமணத்தை பதிவு செய்து கொண்டதாகவும் தெரிய வருகிறது. இதனையடுத்து புதுமண தம்பதிகள் இருவரும் சூலூரில் தனி வீடு பார்த்து நண்பர்கள் உதவியுடன் வாடகை வீட்டில் குடியேறி கடந்த 4 மாதங்களாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இதனிடையே அரவிந்த் ராஜ் தினமும் காலை வேலைக்கு இரவு வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்த நிலையில் வீட்டில் தனியே இருந்த காவியாவிடம் வீட்டின் உரிமையாளர் எந்த ஊர், என்ன ஜாதி என்ற விவரங்களை தெரிந்து கொண்டு பெண்ணிடம் அவரது பெற்றோர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி அவர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பெண்ணை காணவில்லை என தேடி வந்த பெண்ணின் வீட்டாருக்கு மகள் காதல் திருமணம் செய்து கொண்டு சூலூரில் தங்களது சமூகத்தை சேர்ந்தவரின் வீட்டில் தங்கியிருப்பதை அறிந்த பெண் வீட்டார் கடந்த 31ம் தேதியன்று பெண் காவியவை  அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

வேலை முடிந்து வீடு திரும்பிய கணவன் அங்கு மனைவியை காணாமல் அதிர்ச்சி அடைந்து விசாரித்ததில் பெண் வீட்டார் அழைத்து சென்றது தெரியவந்தது.

 அரவிந்த் ராஜ் பெண் வீட்டாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு  கேட்டப்போது ஆணவக்கொலை செய்து விடுவோம் என  மிரட்டியதாக கூறப்படுகிறது.
 சூலூர் காவல் நிலையத்தில்பெண் வீட்டார் புகார் கொடுத்திருப்பதாகவும் காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படியும் அரவிந்த்ராஜிடம் போலீசார் கூறியுள்ளனர்.

 போலீஸ் விசாரணைகாக காவல்நிலையத்திற்கு சென்ற அரவிந்த்  காவிய அவரது பெற்றோர் மற்றும்  மூன்று கார்களில் வந்ததாகவும் போலீசார் நடத்திய விசாரணையின் போது அரவிந்த்ராஜை போலீசார்  உறவினர்கள் முன்னிலையில் காவியா கணவனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறியதாகவும், அங்கிருந்த ஒரு காவலரின் உதவியோடு காவியாவை பெண் வீட்டார் தர தரவன இழுத்து சென்று காரில் ஏற்றிக்கொண்டுசென்றுவிட்டதாகவும் இதுகுறித்து காவல் நிலையத்தில் போலிசாரிடம் நியாயம் கேட்டுள்ளார்

.இதனையடுத்து அரவிந்த் ராஜ் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100ஐ தொடர்பு கொண்டு தனக்கு நேர்ந்தவற்றை கூறிய அரவிந்த் ராஜிடம் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்கும்படி போலீசார் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

 அரவிந்த் ராஜ் தனது பெற்றோருடன் பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் காதல் மனைவியை மீட்டுத்தர வேண்டும் என்று  புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்

 போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via