பயங்கரவாத செயல்களுக்கு  பணம் விநியோகம்

by Editor / 18-11-2021 02:47:39pm
பயங்கரவாத செயல்களுக்கு  பணம் விநியோகம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த தேடுதல் வேட்டையில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதேசமயம், பயங்கரவாதிகளுக்கு உதவி செய்யும் நபர்களும் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்  ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தீவிரவாத செயல்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் சிலர்  ஜம்மு புறநகர்ப்பகுதியில் தங்கியிருப்பாதாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து அங்கு ராணுவத்தினர் நடத்திய சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.43 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர்கள் மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் தெற்கு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்பதும், எல்லையில் உள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தெற்கு காஷ்மீருக்கு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பணம் விநியோகம் செய்வதற்க்காக பணம் கொண்டு வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via