கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விஜய் வசந்த் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

by Editor / 18-11-2021 04:31:53pm
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விஜய் வசந்த் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில்  பெய்த கனமழையால் பல பகுதிகளில் குளங்கள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. குளச்சலில் உள்ள வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு நரிக்கல் பகுதியில் 50 வீடுகளை வெள்ளம் முழ்கடித்தது இந்த வீடுகளில் உள்ள பொதுமக்கள் குளச்சல் அரசு நடுநிலைப்பள்ளியிலும்  மற்றும் பிரண்ட்ஸ் காலனி, யூதாஸ் காலனியை சேர்ந்த 25 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சைமன் காலனி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விஜய் வசந்த் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் குளச்சல் ஆசாத் மசூதியில் வெள்ளம் புகுந்ததை அறிந்து ஜமாத் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

 

Tags :

Share via