இரண்டு அடுக்கு மாடி வீடு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

by Editor / 19-11-2021 07:50:34pm
  இரண்டு அடுக்கு மாடி வீடு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகில் உள்ள பசுமாத்தூர் கிராமத்தில் பாலாற்று ஓராமாக இளங்கோ என்பவர் நிலம் வாங்கி தோட்டம் அமைத்து குடும்பத்தோடு இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் பல லட்சம் மதிப்பிட்டில் இரண்டு அடுக்கு மாடி வீட்டு கட்டி வசித்து வந்த நிலையில் தற்போது பெய்டுவாரும் மழைகாரணமாக  மோர்தானை அணை முழ கொள்ளவு நிரம்பியதால் அதிலிருந்து உபரி நீர திறந்து விடப்படுகிறது. மழைநீர்மற்றும்  பாலாற்று வெள்ளம், மற்றும் மோர் தானா நீர் என அந்த பகுதியில் பெரும் வெள்ளபெருக்கு ஏற்ப்பட்டதால் முன் எச்சரிக்கையாக நேற்று இரவு அந்த பகுதிகரையோர மக்கள் அனைவரையும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டனர்.இந்த நிலையில் இன்று காலை இளங்கோவின் இரண்டு அடுக்கு மாடி வீடு காட்டாற்று வெள்ளநீரின் சீற்றத்தால்  சீட்டு கட்டு போல் சரிந்து ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

  இரண்டு அடுக்கு மாடி வீடு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
 

Tags :

Share via