கணவனோடு வாழ போன காதலியை கொலைசெய்த காதலன் கைது.

by Editor / 03-12-2021 03:35:34pm
கணவனோடு வாழ போன காதலியை கொலைசெய்த காதலன் கைது.

ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரிஸ்வானா, இவருக்கு சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கடப்பா மாவட்டத்தில் உள்ள சிம்ஹாத்ரிபுரத்தைச் சேர்ந்தவருக்கும்  திருமணம் நடந்தது.இந்த தம்பதிக்கு இப்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.இந்தநிலையில் அவரின் கணவர்  புலிவெந்துலாவுக்கு பணிமாற்றமாகியதால்  அவர்களின் குடும்பம் கடந்த ஆண்டு முதல் அங்கு இடம்பெயர்ந்து வசித்து வந்தது.

இந்நிலையில் அந்த பெண்  அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள என்.கே.கல்வாவில் வசித்தபொது அவருக்கு அங்கு திருமணத்திற்கு முன்னர் காதலித்த  காதலனுடன் தொடர்பு ஏற்பட்டது.இதனைத்தொடர்ந்து ரிஸ்வானா மூன்று மாதங்களுக்கு முன்பு முன்னாள் காதலனோடுதலைமறைவானார். 
 
இவர்கள் தனியாக  பெங்களூருவில் வசித்து வருவதாக கிடைத்த தகவலைத்  தொடர்ந்து உறவினர்கள் அவரிடம் சென்று பேச்சு வார்த்தை நடத்தி அந்த காதலனிடமிருந்து பிரித்து கணவனோடு சேர்த்து வைத்தார்கள் .

தன்னை விட்டு காதலி மீண்டும் கணவரோடு வாழ போனதால்  காதலன் ஹர்ஷ்வர்தன்  காதலியைபிரிய மனமில்லாமல் அவரிடம் சென்று மீண்டும் சேர்ந்து வாழ பேசியதாக  கூறப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரிஸ்வானா வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து  போலீசார் வழக்கு பதிந்து விசர்நாய் மேற்கொண்டுவந்த நிலையில் கொலையாளியைத் தேடிவந்த நிலையில் காதலியை கொலை செய்த முன்னாள் காதலன் ஹர்ஷவர்தன்கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via