பத்திரிகையாளர் நல வாரியம்-அரசாணை வெளியீடு

by Admin / 05-12-2021 11:56:39pm
பத்திரிகையாளர் நல வாரியம்-அரசாணை வெளியீடு

பத்திரிகையாளர் நல வாரியம்-அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில்  முதன்முறையாக,  உழைக்கும்  பத்திரிகையாளர்களை முன்களப்   பணியாளர்களாக மாண்புமிகு  தமிழ்நாடு  முதலமைச்சர்  அவர்கள்   அறிவித்துப்    பெருமை   சேர்த்துள்ளார்கள்.அதனடிப்படையில்   உழைக்கும்  பத்திரிகையாளர்களுக்கு  வழங்கப்பட்டு  வரும்.

அனைத்துத்திட்டங்களையும் ஒருங்கிணைத்துச்   செவ்வனே    செயல்படுத்துவதோடு,நலவாரிய  உதவித்  தொகைகள்  மற்றும்  நலத்திட்ட உதவிகள்  அளித்திடும்  வகையில்" பத்திரிகையாளர்  நல வாரியம்  அமைக்கப்படும்"  என்ற அறிவிப்பினைவெளியிட்டார்கள்.  அதனை  செயல்படுத்தும்  விதமாக, கீழ்கணட  ஆணைகளை அரசு   வெளியிடுகிறது.

உழைக்கும் பத்திகையாளர்களுக்கு    வழங்கப்பட்டுவரும்  அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே  செயல்படுத்துவதோடு,நலவாரிய  உதவித் தொகைகள்  மற்றும்  நல்திட்ட  உதவிகள் அளித்திடும் வகையில்" பத்திகையாளர் நல வாரியம்"ஒன்றை  உருவாக்கி  ஆணை வெளியிடப்படுகிறது.

 

Tags :

Share via