கடையநல்லூரில் சாலை மறியல்

by Editor / 06-12-2021 10:32:57pm
கடையநல்லூரில்  சாலை மறியல்

 கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரி எஸ்டிபிஐ கட்சி சார்பில் இன்று மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மைக் செட் அமைத்துக் கொடுத்த அன்பு மைக்செட் உரிமையாளரை காவல்துறை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதால் இதனை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு கடையநல்லூர்  பிஎஸ்என்எல் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கடையநல்லூர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்  பேச்சுவார்த்தை  நடத்தி வருகின்றனர்.

கடையநல்லூரில்  சாலை மறியல்
 

Tags :

Share via