இந்தியா மிகப்பெரிய சக்தி ரசி ய அதிபர் புதின்

by Admin / 07-12-2021 12:52:11am
இந்தியா மிகப்பெரிய சக்தி ரசி ய அதிபர் புதின்

இந்தியா மிகப்பெரிய சக்தி ரசி ய அதிபர் புதின்

21-வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடைபெற்றது.  இந்திய பிரதமர் நரேந்திர மோடி-ரஷிய அதிபர் விளாடிமிர் பங்கேற்று உரையாடினர். மாநாட்டில் புதின் பேசுகையில், இந்தியாவை மிகப்பெரிய சக்தியாகவும், நம்பகமான நண்பனாகவும் கருதுகிறோம். 

 இரு நாடுகளின் உறவு வளர்ச்சியடைந்து வருகிறது மேலும் வளர்ச்சியடைய விரும்புகிறேன். 

 இரு நாடுகளுக்கும் இடையேயான முதலீடு 38 பில்லியனை தொட்டுள்ளது.  ராணுவம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நாங்கள் பெரிதும் ஒத்துழைக்கிறோம். 

அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்கி , இந்தியாவில் தயாரிக்கிறோம். . பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டை என்பது போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களுக்கு எதிரான சண்டையுமாகும். 

. ஆப்கானிஸ்தானில் தீவிரவாதமும், தீவிரவாதத்திற்கு நிதி அளிப்பதும் அச்சுறுத்தலாக உள்ளது. ஆப்கானில் நிலவி வரும் சூழல் குறித்து கவனித்து வருகிறோம்’ என்றார் புதின்.

 

Tags :

Share via