மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளோடு கிணற்றில் விழுந்து தற்கொலை

by Editor / 07-12-2021 10:27:48am
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளோடு கிணற்றில் விழுந்து  தற்கொலை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாலவிடுதி காவல் நிலையத்துக்கு உட்பட்ட செம்பியநத்தம் ஊராட்சி பூசாரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மனைவி சரண்யா  இந்த தம்பதியினருக்கு கனிஷ்கா.06 புவிஷா.03 இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சரண்யாவிற்கு கடந்த இரண்டு வருடமாக மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் சம்பவத்தன்று  இரவு குழந்தைகளோடு காணாமல் போயுள்ளார். இதுகுறித்து உறவினர்கள் தேடி வந்த நிலையில் அவர்களது விவசாய தோட்டத்திலுள்ள  கிணற்றில் தாய் மற்றும் இரண்டு மகள்கள் விழுந்து தற்கொலை செய்துகொண்ட தகவலைத்தொடர்ந்து  திண்டுக்கல் தீயணைப்பு வீரர்கள் சரண்யா மற்றும் இளைய மகள் புதுஷா பிரேதங்களை மீட்டனர். கனிஷ்கா உடலை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். இது குறித்து பாலவிடுதி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via