ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா

by Admin / 11-12-2021 12:14:53pm
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா


108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்
படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில்  வைகுண்ட ஏகாதசி பெருவிழா  கடந்த 3ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தின் 8 ம் நாளான இன்று
காலை 6.30  மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து  நம்பெருமாள்  முத்து கிரீடம், இரத்தின அபயஹஸ்தம் , அடுக்கு பதக்கம் , இரத்தின மகர ஹண்டிகை,முத்துச்சரம், திருவாபரணங்கள் அணிந்து திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், ராமானுஜர் புடைசூழ புறப்பட்டுஅர்ஜுன மண்டபம் வந்தடைந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
 

 

Tags :

Share via