வரலாற்றில் இன்றைய நாள்

by Editor / 15-12-2021 08:26:18am
 வரலாற்றில் இன்றைய நாள்


687 – முதலாம் செர்கியசு திருத்தந்தையாகத் தெரிவு செய்யப்பட்டார்.

1025 – எட்டாம் கான்சுடண்டைன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார்.

1256 – மங்கோலியப் படைகள் உலாகு கான் தலைமையில் அலாமுட் (இன்றைய ஈரானில்) கோட்டையைக் கைப்பற்றி அழித்தன.

1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுக் கடற்படைகள் செயிண்ட் லூசியா சமரில் மோதின.

1799 – முற்றிலும் உள்ளூர் மக்களைக்கொண்ட இலங்கையின் முதலாவது ஆங்கில மதப்பள்ளி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.[1]

1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்புப் படைகளை டென்னசியில் முற்றாகத் தோற்கடித்தனர்.

1891 – ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.

1905 – அலெக்சாண்டர் புஷ்கினின் கலாசாரப் பழமைகளைப் பேணும் பொருட்டு சென் பீட்டர்ஸ்பேர்க்கில் புஷ்கின் மாளிகை அமைக்கப்பட்டது.

1914 – முதலாம் உலகப் போர்: சேர்பிய இராணுவம் பெல்கிரேடை மீண்டும் கைப்பற்றியது.

1914 – சப்பானில் மிட்சுபிசி நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 687 பேர் கொல்லப்பட்டனர்.

1917 – முதலாம் உலகப் போர்: உருசியாவுக்கும் மைய நாடுகளுக்கும் இடையே போர்நிறுத்த உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.

1941 – பெரும் இன அழிப்பு: உக்ரேனின் கார்கீவ் நகரில் 15,000 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர்.

1960 – மன்னர் மகேந்திரா நேபாளத்தின் அரசைக் கலைத்து நாட்டின் முழு அதிகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார்.

1961 – நாட்சி செருமனியின் இராணுவத்தலைவர் அடோல்வ் ஏச்மென் யூத மக்களுக்கு எதிராகப் புரிந்த குற்றங்களுக்காக மரண தண்டனை பெற்றார்.

1967 – ஒகையோவில் ஒகையோ ஆற்றிற்கு மேலே செல்லும் வெள்ளிப் பாலம் உடைந்து வீழ்ந்ததில் 46 பேர் உயிரிழந்தனர்.

1970 – சோவியத் ஒன்றியத்தின் வெனேரா 7 விண்கலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் இறங்கியது. இதுவே வேறொரு கோளின் மீது இறங்கிய முதலாவது விண்கலமாகும்.

1970 – தென் கொரியப் பயணிகள் கப்பல் கொரிய நீரிணையில் மூழ்கியதில் 308 பேர் உயிரிழந்தனர்.

1978 – மக்கள் சீனக் குடியரசை அங்கீகரிப்பதாகவும் தாய்வானுடனான உறவுகளைத் துண்டிப்பதாகவும் அமெரிக்க அரசுத்தலைவர் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.

1981 – லெபனான், பெய்ரூத் நகரில் ஈராக்க்கியத் தூதரகம் வாகனத் தற்கொலைக் குண்டுக்கு இலக்காகியதில் ஈராக்கியத் தூதர் உட்பட 61 பேர் கொல்லப்பட்டனர். இதுவே நவீன முறையில் அமைந்த முதலாவது தற்கொலைத் தாக்குதல் எனக் கருதப்படுகிறது.

1994 – இணைய உலாவி நெட்ஸ்கேப் நவிகேட்டர் 1.0 வெளியிடப்பட்டது.

1995 – ஈழப் போர்: ஈழத்தமிழருக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் "அப்துல் ரவூஃப்" என்பவர் தீக்குளித்து இறந்தார்.

1997 – தஜிகிஸ்தான் விமானம் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜா விமானநிலையத்திற்கு அருகில் வீழ்ந்து நொருங்கியதில் 85 பேர் உயிரிழந்தனர்.

1997 – தென் கிழக்கு ஆசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்கும் உடன்படிக்கை பாங்கொக்கில் கையெழுத்திடப்பட்டது.

2001 – பீசாவின் சாயும் கோபுரம் 11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.

2006 – இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுக் காணாமல் போனார்.

2010 – 90 ஏதிலிகளை ஏற்றிச் சென்ற படகு கிறிஸ்துமசு தீவுக்கருகில் பாறைகளுடன் மோதியதில் 48 பேர் உயிரிழந்தனர்.

2013 – தெற்கு சூடான் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

2014 – சிட்னியின் மையப் பகுதியில் உணவகம் ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவன் 18 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தான். 16 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது, இரண்டு பணயக் கைதிகளும், துப்பாக்கிதாரியும் கொல்லப்பட்டனர்.

2017 – சாவகத் தீவில், தசிக்மலாயா நகரை 6.5 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர், 36 பேர் காயமடைந்தனர்.

                  பிறப்புகள்

37 – நீரோ, உரோமைப் பேரரசர் (இ. 68)

1832 – அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல், ஈபெல் கோபுரத்தை வடிவமைத்த பிரான்சியக் கட்டிடக் கலைஞர் (இ. 1923)

1834 – சார்லசு அகத்தசு யங், அமெரிக்கச் சூரியக் கதிர்நிரலியல் வானியலாளர் (இ. 1908)

1852 – என்றி பெக்கெரல், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (இ. 1908)

1860 – நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென், நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு மருத்துவர் (இ. 1904)

1865 – ஜான் வுட்ரோஃப், பிரித்தானிய கீழ்த்திசை மொழிப்புலமையாளர் (இ. 1936)

1869 – திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர் (இ. 1938)

1889 – நீலகண்ட ஸ்ரீராம், அடையாறு பிரம்மஞான சபையின் தலைவர் (இ. 1973)

1894 – வைபர்த் தவுகிளாசு, கனடிய வானியலாளர் (இ. 1988)

1907 – ஒசுக்கார் நிமேயெர், ஐநா தலைமையகத்தை வடிவமைத்தவ பிரேசில் கட்டிடக் கலைஞர் (இ. 2012)

1908 – இரங்கநாதானந்தர், இந்திய மதகுரு (இ. 2005)

1913 – கா. ஸ்ரீ. ஸ்ரீ, தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்

1932 – டி. என். சேஷன், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் (இ. 2019)

1933 – பாப்பு, ஆந்திர இயக்குநர் (இ. 2014)

1936 – சோ. ந. கந்தசாமி, தமிழகத் தமிழறிஞர்

1942 – மகிபை பாவிசைக்கோ, தமிழக எழுத்தாளர், பத்திரிக்கையாளர் (இ. 2016)

1944 – சிகோ மெண்டிஸ், பிரேசில் தொழிற்சங்கத் தலைவர் (இ. 1988)

1945 – வினு சக்ரவர்த்தி, தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2017)

1953 – ஈ. சரவணபவன், இலங்கை அரசியல்வாதி, ஊடகவியலாளர்

1978 – மாற்கு யான்சேன், டச்சு இசைக்கலைஞர்

1982 – சார்லி சாக்ஸ், ஆங்கிலேய நடிகர்

              ◾◼️இறப்புகள்◼️◾

1675 – யொகான்னசு வெர்மிர், டச்சு ஓவியர் (பி. 1632)

1857 – ஜார்ஜ் கேலி, ஆங்கிலப் பொறியாளர் (பி. 1773)

1890 – வீற்றிருக்கும் எருது, அமெரிக்கப் பழங்குடித் தலைவர் (பி. 1831)

1950 – வல்லபாய் பட்டேல், இந்திய அரசியல்வாதி (பி. 1875)

1952 – பொட்டி சிறீராமுலு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1901)

1965 – மு. பாலசுந்தரம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1903)

1966 – வால்ட் டிஸ்னி, அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1901)

1987 – ப. ராமமூர்த்தி, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1908)

2011 – எஸ். வி. ஆர். கணபதிப்பிள்ளை, இலங்கை மெல்லிசை, திரைப்படப் பின்னணிப் பாடகர்

2011 – கிறித்தோபர் இட்சன்சு, ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1949)

 

Tags :

Share via