விருதுநகர் வரும் மோடி காமராஜர் இல்லம் செல்வாரா?- முன்னேற்பாடுகள்தீவிரம்
தமிழகத்தில் புதிதாக தொடங்க இருக்கும் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க பிரதமர் மோடி வரும் ஜனவரி 12- ந்தேதி விருதுநகர் வருகிறார். அந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்கிறார்.
முன்னாள் முதலாவரும் தேசிய அரசியலில் அன்றைய காலகட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்ட காமராஜர் பிறந்து வாழந்த இல்லம் விருதுநகரில் உள்ளது.
பிரதமர் மோடி தனது பயணத்தின் போது காமராஜர் இல்லத்துக்கும் செல்வார் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் பெருமைகளை குறிப்பிடும் போது காமராஜரைப் பற்றியும் பல நேரங்களில் மோடி சுட்டிக் காட்டி இருக்கிறார்.
அவரை மாபெரும் தலைவர் என்று புகழ்ந்த மோடி ‘ஊழல் இல்லாத ஆட்சியைத்தான் காமராஜர் விரும்பினார். அவர் விரும்பிய ஆட்சியை நாங்கள் தருகிறோம்” என்று குறிப்பிட்டார்.
எனவே காமராஜர் வாழ்ந்த இல்லத்துக்கு அவர் செல்வார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கான முன்னேற்பாடுகளும் நடந்து வருகிறது.
காமராஜர் இல்லத்துக்கு குறுகலான தெரு வழியாக செல்ல வேண்டும். எனவே பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும் ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே விருதுநகரில் உள்ள காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபத்தையும் தயார் படுத்தி வைக்க திட்டமிட்டுள்ளார்கள்.
Tags :