கண்ணெதிரே சகோதரனை இழந்த சகோதரி

by Admin / 27-12-2021 01:59:56pm
கண்ணெதிரே சகோதரனை இழந்த சகோதரி

சென்னை கோடம்பாக்கம், டிரஸ்ட்புரத்தை சேர்ந்தவர் வர்ஷா வயது 22). இவரது தம்பி வினய் வயது 15), பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

இவர்கள் இருவரும் மொபட் ஒன்றில், பூந்தமல்லி அருகே உள்ள இவர்களுக்கு சொந்தமான நிலத்தை பார்ப்பதற்காக சென்றிருந்துள்ளனர். 

வர்ஷா மொபட்டை ஓட்டியுள்ளார்; வினய் பின்னால் உட்கார்ந்து வந்துள்ளார். இவர்கள் பூந்தமல்லி அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் செல்லும் போது எதிரே வந்த வாகனமொன்று, தங்கள் மொபெட் மீது மோதாமல் இருக்க வர்ஷா பிரேக் அடித்துள்ளார். 

இதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் வினய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

தனது கண்முன்னே தம்பி உயிரிழந்ததைக் கண்டு வர்ஷா கதறி அழுதது காண்போரையும் கண் கலங்க செய்வதாக இருந்தது.

 

Tags :

Share via