ஐபோன் 14க்குப் பிறகு, ஆப்பிள் நிறுவன ஏர்போட்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும்

by Editor / 10-10-2022 10:18:33pm
ஐபோன் 14க்குப் பிறகு, ஆப்பிள் நிறுவன ஏர்போட்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும்

உலகின் முன்னணி மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், தனது புதிய தயாரிப்பான ஐபோன்-14 ரக செல்போன்களை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. ஐபோன் 14 செல்போன்கள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் சென்னை ஸ்ரீ பெரும்புதூரில்  உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில், ஐபோன் 14க்குப் பிறகு, ஆப்பிள் நிறுவன ஏர்போட்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.ஆப்பிளின் வயர்லெஸ் இயர்போன்களான 'ஏர்போட்கள்' அதிக வரவேற்பை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via