பரப்பரப்பான சூழலில் கூடுகிறது சட்டசபை.

by Editor / 04-01-2022 12:29:21pm
பரப்பரப்பான சூழலில் கூடுகிறது சட்டசபை.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை (5-ந்தேதி)  கலைவாணர் அரங்கில் உள்ள 3-வது மாடியில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முடிந்ததும் ஆளுநர் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தத் தொடங்குவார். சுமார் ஒன்றரை மணிநேரம் உரையை வாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை சட்டசபை கூடுவதால் அதற்கான முன்னேற்பாடுகளை சட்டபேரவை் தலைவர் அப்பாவு ஆய்வு செய்தார். சட்டசபை கூட்டத்தொடரில்  பங்கேற்கும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via