மனைவியின் மறைவை தாங்காமல் சொந்த ஊரில் கதறிய அமைச்சர்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூர் கிராமத்தில் 1158 பயனாளிகளுக்கு 21 சிறப்பு பொருட்கள் கொண்ட பொங்கல் தொகுப்பினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் வழங்கினார். தனது சொந்த கிராமமான கழுதூர் கிராம நிகழ்ச்சியில் மேடையில் பேசிக் கொண்டிருந்த பொழுது தனது மனைவி இறந்தபின்னர் தற்போது சொந்த கிராமத்துக்கு வந்த முதல் நிகழ்ச்சி என்பதால் தனது உறவினர்களை பார்த்து கதறி அழுதார் இதனால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags :