மர்மமான முறையில் படகு தீ பிடித்து எரிந்து நாசம்.

by Editor / 21-01-2023 09:27:30pm
மர்மமான முறையில் படகு தீ பிடித்து எரிந்து நாசம்.

குமரி மாவட்டம் சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த ஜெபர்சன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகு ஒன்றை இரையுமன்துறை கடற்கரை பகுதியில் தொழிலுக்கு பயன்படுத்தாமல் ஒதுக்கி வைத்திருந்துள்ளார். இந்த படகு இன்று மதியம் திடீரென தீ பிடித்து எரிந்தது. படகில் பரவிய தீ பக்கத்தில் இருந்த புல்களிலும் பரவியதால் அந்த பகுதியில் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது இதனை கண்ட அந்தப்பாகுதி மீனவர்கள்  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். தீ பிடித்து பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.படகு முழுவதும் எரிந்து சேதமடைந்துள்ளது இதனால் படகின் உரிமையாளருக்கு இலட்சம் ருபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தீ பிடிக்க காரணம் தெரியவராத நிலையில் யாரோ மர்ம நபர் தீ வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via