தீவிரவாத தொடர்புடைய 4 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்

by Staff / 23-11-2023 11:51:07am
தீவிரவாத தொடர்புடைய 4 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்

தீவிரவாதிகளுக்கு உடந்தையாக, தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் எஸ்எம்எச்எஸ் மருத்துவமனையின் உதவிப் பேராசிரியர் நிசார்-உல்-ஹாசன், போலீஸ் கான்ஸ்டபிள் அப்துல் மஜீத் பட், உயர்கல்வித் துறை ஆய்வக பணியாளர் அப்துல் சலாம் ராதர், ஆசிரியர் ஃபரூக் அகமது மிர் ஆகிய 4 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.இவர்கள் 4 பேரும் பாகிஸ்தானை சேர்ந்த ஐ.எஸ். மற்றும் சில தீவிரவாத அமைப்புகளுக்கு தளவாட உதவிகளை வழங்கியது, தீவிரவாத நடவடிக்கைகளுக்காக நிதி சேகரித்தது உள்ளிட்ட தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அரசியலமைப்புச் சட்டத்தின் 11-வது பிரிவின்படி பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்று காஷ்மீர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 50க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறுப்பிடத்தக்கது.

 

Tags :

Share via