பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கொலை.

by Editor / 21-01-2023 09:39:27pm
பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கொலை.

திருநெல்வேலிமாவட்டம் திசையன்விளை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட  செல்வமருதூரை சேர்ந்த தங்கதுரை என்பவரின் மகன் ராஜேந்திரன்(22) அங்குள்ள தனியாா் பாலிடெக்னிக்கில் படித்து வந்தாா். இவா், கடந்த ஆண்டு அக்.9ஆம் தேதி குலசேகரன் பட்டினம் கோயிலுக்குச் சென்றுவருவதாக வீட்டில் கூறிச் சென்றாராம். பின்னா் அவா் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் சுமதி (50) அளித்த புகாரின்பேரில், திசையன்விளை போலீஸாா் அக்.21ஆம் தேதி வழக்குப்பதிந்து விசாரித்தனா்.

இந்நிலையில்  20.01.2023-ம் தேதி (நேற்று0 திசையன்விளை கிராம நிர்வாக அலுவலரிடம் அதே பகுதியை சேர்ந்த மூன்று இளஞ்சீறார்கள் ஆஜராகி, மேற்படி காணாமல் போன ராஜேந்திரனை  கொலை செய்து தட்டாா்மடம் அருகே உள்ள எம்எல் தேரி பகுதியில் புதைத்துள்ளோம் என கூறி சரணடைந்துள்ளனர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் மூன்று இளஞ்சிறார்களையும் திசையன்விளை காவல்நிலையத்தில் ஆஜர் செய்தார்.

மேலும், இளம் சிறார்களிடம் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அவர்கள் அடையாளம் காட்டிய பகுதியான  தேரி மேட்டில் வள்ளியூா் டிஎஸ்பி யோகேஸ்குமாா், காவல் ஆய்வாளா்கள் திசையன்விளை ஸ்டீபன் ஜோஸ், தட்டாா்மடம் பவுலோஸ், சாத்தான்குளம் வட்டாட்சியா் தங்கையா ஆகியோா் முன்னிலையில் சடலம்தோண்டி எடுக்கப்பட்டது. அரசு மருத்துவா் மூலம் அங்கேயே பிரேத பரிசோதனையும் நடைபெற்றது. ஒரே பெண்ணை காதலித்ததால் ஏற்பட்ட பிரச்னையில் இந்தக் கொலை நிகழ்ந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Tags :

Share via