மகாராஷ்டிராவில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

by Staff / 19-03-2024 11:45:55am
மகாராஷ்டிராவில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். தெலங்கானா எல்லையில் இருந்து மகாராஷ்டிராவிற்குள் நுழையும் போது, ​​பாதுகாப்புப் படையினர் அவர்களை சுற்றி வளைத்ததால் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இறந்த மாவோயிஸ்டுகள் அனைவரும் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் இருவரது தலைக்கு ரூ.36 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

 

Tags :

Share via