மதுரையில் அதிமுக ஆர்பாட்டம் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 800 பேர் மீது வழக்குப்பதிவு

by Admin / 05-01-2022 12:46:16pm
மதுரையில் அதிமுக  ஆர்பாட்டம் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 800 பேர் மீது  வழக்குப்பதிவு

மதுரை மாநகர மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று அதிமுக சார்பாக மதுரை TM கோர்ட் பகுதியில் நடைபெற்றது.இதில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே ராஜூ என சுமார் 800க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டமாக பொதுமக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக எம்ஜி ஆர் மன்ற மாநகர மாவட்ட செயலாளர் ஜெயபாலன் உட்பட 800 பேர் மீது தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via