முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிபாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக திருச்சி மத்திய சிறைக்கு மாற்றம்

by Editor / 06-01-2022 05:12:27pm
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிபாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக திருச்சி மத்திய சிறைக்கு மாற்றம்

ஆவினில்  வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பதிவு செய்யபட்ட வழக்கில்  கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 05ஆம் தேதி மதியம் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் தனிப்படை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பின் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அவரை போலீசார் அழைத்து வந்தனர்,

இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர், அவருக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மற்றும் கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார் அவருக்கு  15 நாள் நீதிமன்றக்காவலுக்கு  நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து அவர்  பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக திருச்சி மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சிறைச்சாலையில் ஆவண பணிகளை முடித்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு அவர் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
 

 

Tags :

Share via