இரட்டை ரயில் பாதை பணி 25 டன் இரும்பு கம்பிகள்திருட்டு

by Editor / 17-01-2022 12:06:32pm
இரட்டை ரயில் பாதை பணி 25 டன் இரும்பு கம்பிகள்திருட்டு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே ரயில்பாதை பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த 25 டன் இரும்பு கம்பிகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.நெல்லை-நாகர்கோவில் இடையேயான இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி காவல்கிணறு பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரயில் நிலையம் அருகே  வைக்கப்பட்டிருந்த 25 டன் இரும்பு கம்பிகள் திருடு போனதாக ஒப்பந்த மேற்பார்வையாளர், பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

Tags :

Share via