கொரோனா பரவலால் அல்வா கிண்டவில்லை....பட்ஜெட் பணிகள் தொடக்கம்

by Admin / 28-01-2022 11:55:08am
 கொரோனா பரவலால் அல்வா கிண்டவில்லை....பட்ஜெட் பணிகள் தொடக்கம்

பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டானது அதிகமான பக்கங்களில் அச்சிடப்பட்டு துணிப்பைகளில் கட்டப்படும். 

இந்த அச்சிடும் பணிகள் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சுமார் 2 வாரங்களுக்கு முன்பே தொடங்கி விடும். இதன் தொடக்க நிகழ்வாக அல்வா தயாரிக்கும் பணி நடக்கிறது.

இதில் நிதி மந்திரி மற்றும் இணை மந்திரிகள் பங்கேற்பார்கள். 

இந்த நிகழ்ச்சியுடன் தொடங்கும் பட்ஜெட் அச்சிடும் பணிகளில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்கின்றனர். 

அவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

குடும்பத்தினருடன் தொலைபேசியில் கூட பேச அனுமதி கிடையாது.
 
கடந்த ஆண்டு கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு டிஜிட்டல் முறையில் பட்ஜெட் ஆவணங்களை உருவாக்கி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் நேற்று தொடங்கின.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அல்வா தயாரிப்பு நிகழ்ச்சி இந்த ஆண்டு கிடையாது. பணியாளர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

 

Tags :

Share via