அதிகாரிகள் மோசடி செய்ததாக கூறி இளைஞர் விஷமருந்தி தர்ணா போராட்டம்

by Editor / 28-01-2022 04:16:50pm
அதிகாரிகள் மோசடி செய்ததாக கூறி இளைஞர்  விஷமருந்தி தர்ணா போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அடுத்த அகரஆதனூரை சேர்ந்தவர் மதன்மோகன், இவர் தனியார் நிதி நிறுவனத்தில் விவசாயக் கடன் பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார். இவரது டிராக்டர் ஜப்தி செய்து இவரது கையெழுத்தை போலியாக போட்டு அதிகாரிகள் மோசடி  செய்துள்ளதாக கூறி மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு விஷம் குடித்து மதன்மோகன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதே நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via