3ஆம் தேதி முதல் கார் சாகுபடிக்கு 32 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்குநீர் திறக்க அரசு உத்தரவு

by Editor / 02-06-2022 11:26:27pm
 3ஆம் தேதி முதல் கார் சாகுபடிக்கு 32 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்குநீர் திறக்க அரசு உத்தரவு

திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி பாசனத்தில் உள்ள வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் 2260 ஏக்கர், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய் 870 ஏக்கர், நதியுண்ணி  கால்வாய் 2460 ஏக்கர், கன்னடியன் கால்வாய் 12,500 ஏக்கர், கோடகன் கால்வாய் 6000 ஏக்கர், பாளையம் கால்வாய் நேரடி பாசனம் ஆர் 6200 ஏக்கர், திருநெல்வேலி கால்வாய் நேரடி பாசனம் 2525 ஏக்கர், ஆக மொத்தம் 32 ஆயிரத்து 815 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும், பாசன வசதி பெறுவதற்காக 3.6.2022 முதல் 12.06.2022 வரையிலான 132 நாட்களுக்கு கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு,மற்றும் மணிமுத்தாறு ஆகிய நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


 

 

Tags : Government orders to open water to 32 thousand acres of land for car cultivation from 3rd

Share via