இந்திய சீனா இடையே 15வது சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும்

by Admin / 29-01-2022 02:52:05pm
இந்திய சீனா இடையே 15வது சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும்

இந்தியா சீனா இடையிலான ராணுவ தளபதிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தையின் 15வது சுற்று விரைவில் நடைபெறும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

கிழக்கு லடாக்  உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் சீனா படைகளை குவித்து ஏற்பட்ட பதட்டத்தை தணிக்க இரு தரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் அடுத்த கட்டமாக 15வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சசி  ஜனவரி 12-ஆம் தேதி 14வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிவித்தார்.

அப்போது எல்லையில் அமைதி காக்கவும் இருதரப்பினரும் விரைவில் மீண்டும் சந்தித்து பேச ஒப்புக் கொல்லப்பட்டதும் என்று வெளியுறவு துறை தெரிவித்துள்ளது

 

Tags :

Share via