ஆப்கானிஸ்தானில் வறுமையை தவிர்க்க கிட்னிகளை விற்க்கும் மக்கள்
ஆப்கானிஸ்தானில் பட்டினி மற்றும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மக்கள் தங்களது கிட்னிகளை விற்ப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு மாகாணமாகஹெரத்தில் பட்டினிச் சாவு வறுமையை தவிர்க்க கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள்தள்ளப்படுகிறார்கள்.
கிட்னி விற்பனை செய்பவர்களில் பெண்களும் குழந்தைகளும் பெரும் பங்கு வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் விலைவாசி உயர்வு வேலையின்மை உள்ளிட்ட காரணங்களால் அங்கு மோசமான சூழல் நிலவுகிறது சர்வதேச அளவிலான ஆப்கானிஸ்தானின் நிதி மற்றும் முதலீடுகள் முடக்கப்பட்டது மோசமான சூழ்நிலைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags :