மது போதையில் அதிவேகமாக இளைஞர் ஓட்டி வந்த கார் செல்போன் கடை மீது மோதி தீப்பற்றி எரிந்து நாசம்

by Admin / 30-01-2022 04:16:45pm
மது போதையில் அதிவேகமாக இளைஞர் ஓட்டி வந்த கார் செல்போன் கடை மீது மோதி தீப்பற்றி எரிந்து நாசம்

மதுரை சிம்மக்கல் அருகே மது போதையில் அதிவேகமாக இளைஞர் ஓட்டி வந்த கார் செல்போன் கடை மீது மோதியதில் தீப்பற்றி எரிந்து நாசமானது 

மதுரை டவுன் பகுதியைச் சேர்ந்த சிவன் என்பவர் நான்கு பேருடன் ரயில் நிலையம் நோக்கி காரில் சென்றுள்ளார்.

சேதுபதி மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சிக்னல் கம்பத்தில் மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த செல்போன் கடை மீது மோதி நின்றது.

இந்த சம்பவத்தில் கார் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்த உடன் கடையின் முகப்பு பகுதியும் மளமளவென தெரிந்தது காரில் இருந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்
 

 

Tags :

Share via